Tuesday, August 12, 2025
Latest:
உள்நாடு

தெஹிவளை ஜங்சன் பள்ளிவாயலின் நிர்வாக சபை தெரிவு..!

காலி வீதியில் அமைந்துள்ள தெஹிவளை ஜங்சன் பள்ளிவாயலின் நிர்வாக சபை தெரிவு அண்மையில் நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு செயல்படும் வகையில் நிர்வாக சபை குழு ஒன்று பள்ளிவாயல் ஜமாத்தார்களால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டது. இவர்கள் ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிர்வாக சபை பொதுக்கூட்டத்தின் போதே இவர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு, கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிவாயலின் அபிவிருத்தியில் காணப்பட்ட முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டே இவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக கூட்டத்துக்கு வருகை தந்திருந்த ஜமாஅத்தார்கள் தெரிவித்தனர்.

எம். ரிப்கி முஹைதீன் – தலைவர்
அஷ்ஷெய்க்.‌ எம். நஜ்மான் ஷாஹிட் – செயலாளர்
எம். சப்ராஸ் ஷரிப்தீன்- பொருளாளர்
எம். எஸ். எம். மஸூர்
எம். இம்ரான் மிஹிலார்
எம்‌‌. பிக்ரி அன்சார்
எம். சிப்ராஸ் காதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *