உள்நாடு

வாகன இறக்குமதி தொடரும்..! பாராளுமன்றில் ஜனாதிபதி..!

வாகன இறக்குமதிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்றும், வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  இன்று (7) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை மீண்டும் உறுதிப்படுத்தினார் .

தொடர்ந்து பேசிய அவர்,

“வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என்ற வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆண்டு நீங்கள் வாகனம்  ஒன்றை வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு நீங்கள்  வாகனம் ஒன்றை வாங்கமுடியும் – எதுவும் மாறாது.”என்று தெரிவித்தார்.  

சில நபர்கள் தவறான கூற்றுக்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார், மேலும் தற்போதைய கொள்கையை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *