உள்நாடு

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளர் தனது கடமைகளை பொறுப்பு..!

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் இன்று (07) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தெல்தோட்டை பிரதேசத்திற்குட்பட்ட மெடிஹென எனும் கிராமத்தின் திரு. முஹம்மது சுல்தான் மற்றும் திருமதி சித்தி மர்லியா தம்பதிகளின் மகனாவார்.

கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் தனது உயர்கல்வியை தொடர்ந்த இவர், பல்வேறு அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
மத்திய மாகாண சபையின் பிரதான மற்றும் கல்வி அமைச்சில் சேவையாற்றி மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு தனது உயர்ந்த பட்ச சேவையை வழங்கியிருந்தார். பின்னர் கம்பளை கல்விப் பணிமனையிலும் ஒரு சில மாதம் ஆசிரியராகவும் பணியாற்றினார். இறுதியாக இலங்கை பாராளுமன்றத்தில் பணியாற்றியிருந்தார்.

கடந்த 01ம் திகதி நுவரெலிய பிரதேச சபையின் (நானுஓயா) செயலாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தை மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயாலாளரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *