கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் பத்து பேர் கைது
இலங்கை கடற்படையினர் கற்பிட்டி பத்தளங்குண்டு தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (05) இரவு மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகு ஒன்றை பத்து மீனவர்களுடன் கைது செய்துள்ளனர்
நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாகாகவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளை கற்பிட்டி பத்தளங்குண்டு தீவின் அருகில் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு ஒன்றை பத்து மீனவர்களுடன் கைப்பற்றியதுடன் அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட உள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)