உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரத்தான முகாம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் குருத்தித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் நேற்று (06.08.2025) புதன்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாமில்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் எஸ்.விருஷ் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *