பல தடவைகள் மழை பெய்யலாம்..!
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசலாம் எனவே மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.