சாரதி அனுமதிப்பத்திர கரும பீடம் விமான நிலையத்தில் திறந்து வைப்பு
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று நேற்று (03) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.



