தெஹியோவிட்ட பஸ் விபத்தில் 42 பேர் காயம்.

கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் இன்று (02) காலை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 42 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.