உள்நாடு

சாய்ந்தமருதில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” இரண்டாம் கட்ட அடிக்கல் நடும் வைபவம்

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக சாய்ந்தமருதில் இரண்டாவது கட்ட வேலைகள் நேற்று (31) வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட வீட்டுக்கு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கலை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. டீ. எம். ராபீ, கல்முனை மாநகர பிரதி ஆணையாளர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் சாய்ந்தமருதுக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எப். திலீப் குமார் மற்றும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், இணைப்பாளர் எம்.ஐ. நஜீம், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *