உலகம்

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கத்தினால் செவெரோ குரில்ஸை தாக்கிய முதல் சுனாமி அலை

சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட காணொளிகள் கடல் மட்ட உயர்வு காரணமாக சில கட்டமைப்புகள் நீரில் மூழ்கியிருப்பதைக் காட்டின. உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் அலைகள் தாக்குவதற்கு முன்னும் பின்னும் உள்ள பகுதியைக் காட்டின.

எவ்வாறாயினும், சுனாமி தாக்கிய குறித்த பகுதி எரிமலை மற்றும் நில அதிர்வு நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானின் சில பகுதிகள் மற்றும் கலிபோர்னியா, வாஷிங்டன், ஓரிகான் மற்றும் அலாஸ்கா உள்ளிட்ட பல அமெரிக்க மாநிலங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுனாமி ஏற்பட்டால், கலிபோர்னியாவின் ஃபோர்ட் பிராக், இரவு 11:50 மணிக்கு அலைகள் வரும் நேரங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை அதிகாலை 12:40 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலும், அதிகாலை 1:05 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்திலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவின் அலூடியன் தீவுகளில், சில பகுதிகள் உயர் மட்ட சுனாமி எச்சரிக்கையின் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *