உள்நாடு

16 மாவட்டங்களில் நாளை முதல் டெங்கு ஒழிப்பு திட்டம்..!

16 மாவட்டங்களை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை (30) முதல் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த திட்டம் ஜூலை 5 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது.

நடப்பாண்டில் இதுவரை 28,752 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் மேல் மாகாணத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *