பிரேசிலில் எயார் பலூன் விபத்து; 8 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எயார் பலூனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, மேலும் அதன் ஒப்பரேட்டர் பலூனை கீழே இறக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
பலூனில் இருந்த பலர் வெளியே குதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.