உலகம்

ஈரானின் 3 அணுசக்தி தளங்களின் மீது வெற்றிகரமாக தாக்கியுள்ளோம்; டொனால்ட் ட்ரம்ப்

ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரான் இப்போது சரணடைந்து பேச்சுக்கு வரவேண்டுமென ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து விசேட அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களான போர்டோவ் (Fordow)நதான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) மீது அமெரிக்க இராணுவம் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நிறைவு செய்ததாக அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து அவர் தனது சமூக ஊடகப் பதிவில், “அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்பரப்பை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மை தளமான போர்டோவ் மீது முழு அளவிலான குண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பி வருகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃபோர்டோ ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி உற்பத்தி தளமாக கருதப்படுகிறது. இது மலைப்பகுதியில் ஆழமாக அமைந்துள்ளதால், தாக்குதல் நடத்துவது மிகவும் சவாலானது. ட்ரம்ப், இந்த தளத்தின் மீது “முழு அளவிலான குண்டுகள்” வீசப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் ஜூன் 22, 2025 அன்று நடைபெற்றதாகவும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பி வருவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தாக்குதலின் துல்லியமான நேரம் அல்லது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் வகைகள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

“உலகில் வேறு எந்த இராணுவத்தாலும் இதை செய்ய முடியாது,” என்று ட்ரம்ப் பெருமையுடன் கூறி, அமெரிக்க இராணுவ வீரர்களை பாராட்டியுள்ளார்.

இதுவரை ஈரானின் உத்தியோகபூர்வ பதில்கள் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களில், ஈரான் ஆதரவு குழுக்கள் இந்த தாக்குதலை கண்டித்து, பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *