உள்நாடு

கண்டி எசல பெரஹெரா ஜுலை 25ல் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹெரா, எதிர்வரூம் ஜுலை 25 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இந்த ஆண்டும் கண்டி நகர வீதிகளில் பத்து நாட்கள் பிரமாண்டமாக வலம் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல பண்டார தெரிவித்தார்.
.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று முன்தினம் (19) மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,

எதிர்வரும் ஜுலை 30 ஆந் திகதி ஆரம்ப கும்பல் பெரஹெராவுடன் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் 8 ஆந் திகதி நிறைவுபெறும் என்றும் இம்மமுறை பெரஹெராவுக்கு யானைகளின் தட்டுப்பாடு நிலவுதாகவும் தெரிவித்தார்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *