உள்நாடு

ஆராய்ச்சிகட்டுவ பிரதேச சபை தவிசாளர் தெரிவில் குழப்பம் எதிர் கட்சியினர் வெளிநடப்பு

புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் கன்னி அமர்வும் தலைவர் தெரிவும் வெள்ளிக்கிழமை (20) நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் அன்றைய தினம் (20) ஏற்பட்ட அமளிதுமளி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் வெளிநடப்பு காரணமாக அது பிரிதொரு தினத்திற்கு பிற் போடப்பட்டுள்ளது.

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையை அமைப்பதற்கான கூட்டம் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது. இதில் கடந்த பிரதேசசபை தேர்தலில் வெற்றியீட்டிய உருப்பினர்கள் வருகைதந்திருந்ததுடன் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலம் எதிர்கட்சிகளின் வசம் இருப்பதாகவும் ஆனாலும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பை கோறுவதாகவும் குற்றம் சாட்டிய எதிர்கட்சியினர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்

22 ஆசனங்களைக் கொண்ட மேற்படி ஆராச்சிகட்டுவ பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போனஸ் ஆசனத்துடன் 10 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போனஸ் ஆசனங்களுடன் 6 ஆசனங்களும் ,ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சி 2 ஆசனங்களும்,மக்கள் முன்னனி 2 ஆசனமும்,ஐக்கிய தேசியக் கட்சி 1ஆசனமும்,சுயேட்சைக்குழு 1 ஆசனமும் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் அன்றைய தினம் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 12 உறுப்பினர்கள் பெரும்பான்மை இருப்பதாக கைதூக்கி ஆட்சி அமைக்க அனுமதி கோறப்பட்ட நிலையில் ரகசிய வாக்கெடுப்பிற்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் கோரிக்கை வைத்ததாகவும் இதனால் சபையில் அமளி துமளி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக வெளிநடப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் புத்தளம் மாவட்ட ஆராச்சிகட்டு பிரதேச சபையின் ஆட்சி அமைப்பது எப்போதும் என்ற தீர்மானம் எதுவுமின்றி பிற் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *