மிளகாய்த்தூள், கையுறை, மாஸ்க் ஆகியவற்றுடன் இரவு நேரத்தில் நடமாடிய இருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து நேற்றிரவு (20) பொலிஸார் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
மாவடிச்சேனை எம்.கே.எரிபொருள் நிரப்பு நிலைய பிரதான வீதி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இரு இளைஞர்கள் நடமாடியுள்ளனர்.
இதனை அவதானித்த பொதுமக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து மிளகாய்த்தூள், கையுறை, மாஸ்க் ஆகிய பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதான இருவர் தொடர்பாகாவும் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)