உலகம்

மோதலில் அமெரிக்க தலையீடு மோஷமான விளைவுகளைத் தரும்; கடும் தொனியில் ரஷ்யா எச்சரிக்கை

ஈரான் இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டால் மிக மோசமான விளைவுகளுக்கு முகங் கொடுக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கினால் பிரச்சினைத் தீர்வுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரஷ்ய வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கருத்துத் தெரிவிக்கையில் மோதல் தொடர்வது ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லுமென்றும் இரு நாடுகளும் மோதலை கொண்டு வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

ஈரானிலுள்ள அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் பயங்கரமான ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக்கலாமென்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *