சிறப்பாக நடைபெற்ற தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
வத்துப்பிட்டிவலை ஆதார வைத்தியசாலை,அத்தனகல்ல பிரதேச செயலகம்,அத்தனகல்ல பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி, இணைந்து நடாத்திய தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று 17/06/2025 தினம் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வட்ட கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முற்பகல்9.30 முதல் 11.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் வத்துப்பிட்டிவலை வைத்தியசாலை தொற்றா நோய் கட்டுப்பாட்டு பிரிவின் போதனா தாதியாக கடமையாற்றி வரும் தம்மிக நிரோஷனீ படேபொள அவர்களால் விழிப்புணர்வு விளக்கம் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அத்தனகல்ல சுகாதார மருத்துவ அதிகாரி Dr.S.S பிரியதர்ஷன் ( MOH) அவர்களின் விழிப்புணர்வு விளக்கவுரையும் அடுத்து இடம்பெற்றது
தொற்றா நோய் தொடர்பில் கவனயீனமாக இருக்காது தேவையான பரிசோதனைகளை உடனுக்குடன் செய்வதன் மூலம் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தொடர்பான நிலையை அறிந்து உடனடியாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தொற்றா நோயின் ஆபத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் எனவும் இனி வரும் காலங்களில் இதனை பரிசோதித்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தருவதற்கு முயற்சி எடுப்பதாகவும் விரிவுரைகளின் உரை நிகழ்த்தியவர்களால் கூறப்பட்டது.
கஹட்டோவிட்டாவை சேர்ந்த வைத்தியர் ரோசானா ( வைத்தியர் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலை)அவர்கள் இந்நிகழ்வில் வழங்கப்பட்ட கருத்துக்களை தமிழ் மொழியில் விளக்கி விழிப்புணர்வு நிகழ்வு மக்களை வெற்றி கரமாக சென்றடைய உதவிபுரிந்தார்.
இந்த நிகழ்வில் கஹட்டோவிட்டாவிற்கு அண்மையில் காணப்படும் பாலர் பாடசாலை பெற்றோர்களும்,சகோதர இனத்தை சேர்ந்த பாலர் பாடசாலை பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தமை இன நல்லுறவுக்கான எடுத்து காட்டாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
மேலும் கஹட்டோவிட்டாவை சேர்ந்த அதிகமான பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சம் என்பதுடன் ஆண்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதை காண கூடியதாக இருந்தது.
இந்த நிகழ்வு அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினரும் கஹட்டோவிட்ட முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் தலைவருமாகிய அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களின் ஒருங்கிணைப்புடனும், கஹட்டோவிட்ட YMMA அமைப்பின் ஏற்பாட்டிலும் மேற்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




(தொகுப்பு.
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்)