சீனன்கோட்டைக்கு விஜயம் செய்த சீன இளவரசி
சீன இளவரசி ஸூ சிவினர் சீனங்கோட்டைக்கு விஜயம்
சீன அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஸு சிவினர் 14/06/2025 சீன ங்கோட்டைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற சீலங்கோட்டை மாணிக்க கல் சந்தைக்கு, சீன இளவரசி ஒருவர் விஜயம் மேற்கொண்டது இதுவே முதன்முறையாகும் இதுகுறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
இவரின் விஜயத்தின் போது சீனன் கோட்டை மாணிக்கக்கல் மற்றும் ஆபரண வர்த்த சங்கத்தினர் இவருக்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர்.
சீன இளவரசி ஸூ சிவினருடன் சீன ரயில்வே அதிகாரி திரு வான்ங் மற்றும் சீனத் தூதுக்குழவினரும் கலந்து கொண்டனர். சீனன் கோட்டை மாணிக்க மற்றும் ஆபரண வர்த்தக சங்கத்தின் செயலாளர் அஷ்கர் அலி முபாரக் மற்றும் இச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மற்றும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். மேலும் விசேட அம்சமாக சீன -இலங்கை கலாச்சாரம் , வரலாறு, மற்றும் தொண்டு தொட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மாணிக்க வர்த்தக வியாபாரத் தொடர்புகள் போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கிய ஒரு விளக்கக் காட்சியும் மபாஸ் மசூர் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது
சீன இளவரசியும் தூதுக்குழுவும் சீனங்கோட்டை மாணிக்கக்கல் வர்த்த சங்கத்தினரரல் நடாத்தப்படும் மாணிக்கக்கல் பயிற்சி மையத்துக்குச் சென்று பார்வையிட்டதோடு மாணிக்க சந்தைக்கும் அதில் உள்ள பல காரியலயங்களுக்கும் விஜயம் செய்தனர்.
இந்தக் குழு இலங்கை- சீன கலாச்சார வணிக கவுன்சில் செயலாளர் இபாம் ஹனபியின் வேண்டுகோளின் பேரில் இந்த விஜயத்தை மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





(பேருவளை விசேட நிருபர்- பி. எம். முக்தார்)