கற்பிட்டி பிரதேச சபை தலைவர் பயணித்த வாகனம் மீது தாக்குதல்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு பயணித்த வாகனம் மீது மதுரங்குளி பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் இல்லத்திலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே நேற்று இரவு (16) தாக்குதலுக்கு உள்ளானார்.
தலைவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். மேலும் அந்தப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.