உள்நாடு

மல்வானை அல் முபாரக்கில் மூன்று மாடி ஆசிரியர் விடுதி திறப்பு

மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையில் சுமார் 45 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று மாடி ஆசிரியர் விடுதி அண்மையில்(12) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது

இது இப்பாடசாலையின் பழைய மாணவரும் “ஸஹரா” அறக்கட்டளையின் நிறுவனருமான சமூக சேவையாளர் அல்ஹாஜ் பசூல் ஜிப்ரியின் தனிப்பட்ட நிதியினால் கட்டப்பட்டது.

புதிய மூன்று மாடி ஆசிரியர் விடுதியை அல் ஹாஜ் பசூல் ஜிப்ரி அவர்களே திறந்து வைத்தார்.

இந்த ஆசிரியர் விடுதி 36 ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதிகளை வழங்கும்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு ஆசிய தவ்வா கவுன்சிலின் தலைவர் அல்ஹாஜ் நிக்கலஸ் சில்வெஸ்டர், களனி கல்வி வலயத்தின் கல்வி (தமிழ்) பணிப்பாளர் மொஹமட் தௌசிர், பாடசாலை உப அதிபர் எம்.எம். மொஹமட் ஸஹரா அறக்கட்டளையின் திட்ட பணிப்பாளர் மொஹமட் ஜெளபர், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.ஏ. இஸ்மாயில், முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி (ஓய்வுபெற்ற) அல் ஹாஜ் எம்.எம்.ஏ. கபூர் பிரபல ஊடகவியலாளர் அல் ஹாஜ் பெளஸான் அப்துல் ஹமீட் உட்பட மற்றும் பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்கள் பாடசாலையின் பேன்ட் வாத்திய இசைக்குழுவால் வரவேற்கப்பட்டு, கண்கவர் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்படுவதையும், ஸஹரா அறக்கட்டளையின் நிறுவனர் அல்ஹாஜ் பசூல் ஜிப்ரி புதிய மூன்று மாடி ஆசிரியர் இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதையும் பாடசாலை சார்பாக நினைவு சின்னமொன்றை ஜிப்ரி அவர்களுக்கு வழங்கி வைக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.

(எம். டி. எம். ஹனபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *