உள்நாடு

கிண்ணியா நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் கிண்ணியா நகர சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான எம்.எம்.மஹ்தி அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *