உள்நாடு

ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு

சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 22/06/ 2025 அன்று காலை 9:00 மணிக்கு பாஸியா ஜும்மா பள்ளிவாயலில் கலாபீட நிர்வாக சபை தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.சீ.எம் ஹம்ஸா தலைமையில், கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – யமனி – பீ ஏ)யின் வழிகாட்டலில், கலாபீட அதிபர் மெளலவி எம்.ஏ.எம் அஸ்மிகான் (முஅய்யிதி)யின் மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.

2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் 10 மௌலவிமார்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். இம்முறை 10 மாணவர்கள் பட்டம் பெற இருக்கின்றனர்.

மார்க்கக் கல்வியோடு பாடசாலை கல்வியும் சிறப்பாக நடைபெறுவதோடு, ஆத்மீக துறையில் பூரண வழிகாட்டலும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு சிறந்த தாயிகள் உருவாக்கப்படுகின்றனர்.

இவ்விழாவில் பிரதம அதிதகளாக அகில இலங்கை ரபாயி தரீக்கா சங்கத்தின் ஆயுட்கால தலைவர் அஷ்ஷைக் அஸ்ஸெய்யித் யு.பி. ஆஷிக் தங்கள் அவர்களும், அஷ்ஷைக் அஸ்ஸெய்யித் பஷீர் தங்கள் அவர்களும், கௌரவ அதிதிகளாக கலீபத்துல் குலபா அல்ஹாஜ் முஹம்மத் ஸுஹூர் பாரி அவர்களும்,அஸ்ஸெய்யித் அஹ்மத் ஷரீப் கோயா தங்கள் (மிஸ்பாஹி) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

விஷேட அதிதியாக சீனங்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் முக்தார் அவர்களும், பிரதம பேச்சாளராக புருனே சுல்தான் ஷரீப் அலி பல்கலைக்கழகத்தின் முன்னால் பீடாதிபதி கலாநிதி ஏ.எம். அபுவர்தீன் (அஸ்ஹரி) கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

சங்கைக்குரிய ஷேக்மார்கள்,கலீபாக்கள், உலமாக்கள், சீனங் கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட நிர்வாக சபை உறுப்பினர்கள், இக்வான்கள், ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

(பேருவலை பீ . எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *