திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் அவர்களின் தலைமையில் நேற்று (13.06.2025) திருகோணமலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற கௌரவ உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சிப் போராளிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.




(கே. எ. ஹமீட்)