உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதல்; டெல்அவீவின் முக்கிய இலக்குகள் மீது குண்டு மழை

ஈரான் மீது வரம்பு மீறிய தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தை இலக்கு வைத்து ஈரான் பதிலடி தாக்குதல்களை கடுமையாக நடத்தியுள்ளது.

ஈரான் சற்று நேரத்திற்கு முன் இஸ்ரேலின் ராணுவ தலைமையகம், விமான நிலையங்கள் மற்றும் முக்கிய தளங்கள் என 9 இடங்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 42 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உலகில் எந்த அரசாங்கத்தினாலும் சுட்டு வீழ்த்த முடியாத அதிக வேகம் கொண்ட உயர் தொழிநுட்ப அமெரிக்க தயாரிப்பு தாக்குதல் விமானமான F 35 விமானங்கள் மூன்றையும் ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளதுடன், மரணத்தை விட கொடுமையான பதிலடியை தருவோம் என கூறிய நிலையில் உச்ச கட்ட பதிலடியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

3 கட்டங்களாக பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய ஈரான் ஒவ்வொரு முறையும் நூற்குக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *