இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி; நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரான் மக்களுக்கு ஆற்றிய உரையில், இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சபதம் செய்தார்.
அத்தோடு இஸ்ரேலிய தாக்குதல்களில் பல இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.