உள்நாடு

அக்குறணை பிரதேச சபைத் தவிசாளராக இஸ்திஹார் இமாமுதீன் கடமையேற்பு

அக்குரணை பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவு செய்யப்பட்டதோடு இன்று உத்தியோகபூர்வமாக கடமையினையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
நேற்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் 16 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூன்று மேலதிக வாக்குகளை பெற்று அக்குரணை பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவாகியுள்ளதை அடுத்து நேற்று முன்தினம்; பி. ப. 2.00 மணி அளவில் அக்குறணை பிரதேச சபையின் செயலாளர் ரனசிங்க முன்னிலையில் உத்தியோகபூர்மாக கடமையைப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியின் சமிந்த திலகரத்ன அவர்களும் உத்தியோகபூர்வமாக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்குறணை ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பௌத்த இந்து முஸ்லிம் சமயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அக்குரணை பிரதேச சபையில் 30 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை, இதன் காரணமாக 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தவிசாளர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தாரிக் அலி தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு 13 வாக்குகளைப் பெற்றார்.
இதேவேளை, பொதுஜன ஐக்கிய முன்னணியின் சமிந்த திலகரத்ன 18 வாக்குகளைப் பெற்று பிரதித் தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் வசந்த குமார 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *