ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது; இதுவரை 100 பேர் பலி உடல்கள் மீட்பு, முன்னாள் முதல்வர் விஜய் ருபானி பயணம் அவரது உடல் தேடல்
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். விமானத்தில் 11 சிறார்கள் பயணித்ததாகவும், அதில் 2 கைக்குழந்தைகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் விமான விபத்தில் சிக்கிய முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கதி என்ன என்று மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். பயணிகள் விமான விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை நண்பகல் 1.17 மணிக்கு புறப்பட்ட போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை நிலையில் அப்பகுதியில் பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. அகமதாபாத்தில் உள்ள மேகானி நகர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் விமானம் விழுந்து நொறுங்கியது.242 பயணிகளுடன் இருந்த விமானத்தில் கரும் புகை வெளியேறும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை தீவிரம் காட்டி வரும் நிலையில், அகமதாபாத் அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் 110 பேர் உயிரிழந்துள்ளனர் . விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 1,000 அடி உயரத்தில் சென்றபோது விமானம் திடீரென விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என தகவல் வெளியானது.
இதனை அடுத்து அகமதாபாத் விமான விபத்து குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் அப்போது பேசிய அவர் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இந்த நிலையில், இதை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அமித்ஷா, ராம்மோகன் நாயுடு இருவரையும் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்து மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிக்கை
ஆமதாபாத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. கூடுதல் விவரங்களை உடனுக்குடன் அறிய எங்களது எக்ஸ் சமூக வலைதள கணக்கை பார்வையிட வேண்டும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவசர உதவி எண்
விபத்து தொடர்பான தகவல்களைப் பெற 079-22869211 என்ற அவசர உதவி எண்னை தொடர்பு கொள்ளலாம்.
விமான விபத்து குறித்து குஜராத் முதல்வர் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் பேசியுள்ளார். அவர், விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி தீ பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. படுகாயங்களுடன் பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகள் மீது விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக குஜராத் முதல்வருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயற்சி ஈடுபட்டுள்ளனர். 80 பேர் கொண்ட மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப்படையின் மூன்று குழுவினர் ஆமதாபாத் விரைந்து உள்ளனர். ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விரைந்தார்.
242 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளான ஆமதாபாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலையம் நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் விமான விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி பயணம் செய்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டிஜிசிஏ தெரிவித்து உள்ளது.
ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் விபத்துள்ளான விமானத்தில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனை சேர்ந்தவர்கள் 53 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர் இருந்துள்ளனர். இரு விமானிகள், 10 பணியாளர்களும் விமானத்தில் பயணித்துள்ளனர்.
இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆமதாபாத் விமான நிலையத்திற்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆமதாபாத் செல்ல இருந்த 3 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்தோம். இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். யுபத்தில் சிக்கிய பிரிட்டனை சேர்ந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
விமான விபத்து குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டாக்டர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சில நிமிடங்களில் போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விபத்துக்குள்ளான போயிங் 787 – 8 விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர். அவர்களில்
169 பேர் இந்தியர்கள்,
43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்,
7 பேர் போர்ச்சுக்கல்லை சேர்ந்தவர்.
காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயணிகள் தேவைக்காக 1800 5691 444 என்ற உதவி எண் செயல்படுகிறது. விபத்து தொடர்பாக எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)