உள்நாடு

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; 42 வயது நபருக்கு விளக்கமறியல்

பன்னிரெண்டு வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 42 வயது ஆண் நபரை இந்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பதில் நீதவான் வீரேந்தா கனன்கேகே நேற்று முன்தினம் (07) உத்தரவிட்டார்.

கடுவெல, வெலிவிட்ட, போகஹவத்தையைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பியகம பொலிஸ் பல்வேறு புகார்கள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிலந்த ராஜகருணாவுக்கு தனி நபரொருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த ஆறாம் திகதி பியகம பகுதியில் உள்ள களனி ஆற்றின்
கரையோரத்தில் இரு பக்கங்களும் மூடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பாடசாலை சீருடை அணிந்திருந்த சிறுமியுடன் இந்நபர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்தள்ளது.

சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

பியகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யு டி வீரசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேக நபரை வழக்கு நடவடிக்கைப் பிரிவின் பொலிஸ் சார்ஜென்ட் சுசந்த (35328) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

(எம். டி. எம். ஹனபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *