அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய சாலைகளையும் அபிவிருத்தி செய்து தரமான , சிறந்த மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய சாலைகளையும் அபிவிருத்தி செய்து தரமான , சிறந்த மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய வைத்தியசாலைகள் கல்நேவ பிரதேச வைத்தியசாலை கல்நேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பல பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களை ஆய்வு செய்த அமைச்சர் வெளிநோயாளர் பிரிவுகள், வைத்தியசாலை வளாகங்கள், வார்டுகள், மருந்தகங்கள்,சமயலறைகள் , மருந்து கடைகள், டயாலிசின் பிரிவுகள், ஆய்வுகள் உள்ளிட்ட அந்த வைத்தியசாலைகளின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
அனுராதபுரம் மாவட்ட மக்களைப் பாதிக்கும் தொற்று மற்றும் தோற்றா நோய்களை கட்டுப்படுத்துதல் குழந்தைகள் மற்றும்
தாய்மார்களின் தற்போதைய ஊட்டச்சத்து நிலை மற்றும் எதிர்கால ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துதல் , சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு திரிபோஷாவைப் பெறுதல் ,கள அலுவலகங்களின் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் எதிர் கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)