வட மத்திய மாகாணத்துக்கான சீ.ஐ.டி அலுவலகம் திறப்பு
வடமத்திய மாகாணத்திற்கான குற்றப்புலனாய்வுப் பிரிவு அலுவலகம் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய ஆகியோரின் தலைமையில் அனுராதபுரத்தில் (08) திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகு குற்றப்புலனாய்வுத் துறையின் செயற்பாடுகளை மேலும் திறம்படச் செய்வதற்காக மாகாண மட்டத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவுகளை ஒரு படியாக வடமத்திய மாகாணத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பிரிவு நிறுவப்பட்ட பிறகு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க கொழுப்புக்கு வரவேண்டிய அவசியத்திற்குப் பதிலாக எளிதாக தங்கள் புகார்களை பதிவு செய்ய இது உதவும். இந்த நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் அன்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






(எம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம்)