உள்நாடு

பொசன் பண்டிகையை யொட்டி அனுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் அனுராதபுரம் நகரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய பகுதிகளிலுள்ள சில பாடசாலைகள் எதிர் வரும் 12 ம் திகதி வரை மூடப்படும் என வடமத்திய கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று 07 ம் திகதி முதல் 10 ம் திகதி வரை பொசன் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை தேசிய பொசன் நிகழ்வு முழுமையாக அரச அனுசரணையுடன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளில் பொசன் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

(எம்.ரீ.ஆரிப்- மநுப செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *