பலஸ்தீனத்தை முதன்மைப் படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்திப்போம்; மு.கா தலைவரின் ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்து
இன்று முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரையின் இறுதி நாளில் “ஈதுல் அழ்ஹா”வைக் கொண்டாடுகின்றார்கள், நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவரது அருமைப் புதல்வர் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உன்னதமான தியாகத்தை- எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கு அவர்கள் முற்றிலும் அடிபணிந்த நிகழ்வை இந்த நாளில் நினைவு படுத்தியவர்களாகப் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றார்கள். இந்த புனித மாதத்தில் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதானது அதை மேற்கொள்ளக்கூடியவர்களுக்கு தமது நம்பிக்கையின் மீதான இஸ்லாத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இது ஆன்மாவின் பேணுதல் தன்மையைப் பிரதிபலிக்கின்றது.
இறைவனிடம் மன்னிப்புத் தேடுவது, ஈந்துதவுவது, அவ்வாறு செய்ய முடியாதவர்கள் தங்களில் ஆன்மீக மாற்றத்தை வளர்த்துக் கொள்வது என்ற இந்த புனித அனுபவம் நம் இதயங்களை மென்மையாக்குகின்றது.இறைவனிடம் மனதார பிரார்த்தனை செய்யவும் நம்மைத் தூண்டுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில், பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான், யெமன் மற்றும் அண்டை நாடுகளான லெபனான் போன்ற நாடுகள் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு பட்டினியையும் தாங்கிக் கொண்டு துணிச்சலோடு முகம் கொடுக்கும் தியாகிகளை இதயப்பூர்வமான நினைவுகூருகின்றோம்.
இன்றைய ஈத் நாளில் கூட , தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. காஸாவில் “நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர” போர்நிறுத்தத்தைக் கோரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்த நிலையில், அங்கு நிவாரண உதவி விநியோகம் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இருண்ட , கொடூரமான காலத்தில், போரில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனியர்களையும் ,அவர்களுக்கு உதவும் நாடுகளையும் பாதுகாக்கவும், சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவர்களின் உறுதியை வலுப்படுத்தவும் எல்லாம் வல்ல இறைவனிடம் நாங்கள் மனம் உருகிப் பிரார்த்திக்கிறோம்.
ஈத் முபாரக்!