கற்பிட்டியில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை
கற்பிட்டி அனைத்து பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (07) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் தொழுகையும் கற்பிட்டி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் முன்னாள் பேஷ் இமாம்களான அஷ்ஷெய்க் எம். மிஸ்பா மற்றும் அஷ்ஷெய்க் ஆசீம் ஆகியோர் நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)