இஸ்லாமிய சகோதரதத்துவம் என்றும் நிலைத்து நிக்கட்டும்; சென்னை மாநகராட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் B.A வாழ்த்து
புனித பக்ரீத் (ஈத்-உல்-அழ்கா) திருநாளை கொண்டாடும் இந்நாளில், அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று
தலைவர் -நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கே. கே. நகர் க.தனசேகரன் B.A.,தெரிவித்துள்ளார்.
அவர் ஹஜ் பக்ரீத் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது –
ஹஜ் என்பது இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாகும்; இந்த புனித யாத்திரையின் நிறைவு நாளில், இறை தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், தியாகம், ஈகை மற்றும் அன்பை வளர்க்கும் இந்த திருநாள், உங்கள் வாழ்வில் அமைதி, நல்வாழ்வு மற்றும் இறைவனின் அருள் நிரம்பிட வாழ்த்துகிறேன்.
“தியாகம், பாசம், பகிர்வு நிறைந்த பக்ரீத் பெருநாள் உங்கள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் செழிப்பு தர வாழ்த்துகிறேன்!”
தமிழக தொப்புள் கொடி உறவுகளான எமது இஸ்லாமிய ர்களுக்கும், உலகில் வாழும் இஸ்லாமிஎர்களுக்கும் இந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்றும்.க.தனசேகரன் B.A., மேலும் கூறியுள்ளார்.
பக்ரீத் முபாரக்!