அரச வங்கி மேலாளரின் ஏ.டி.எம் அட்டையில் மோசடி; சந்தேக நபரைக் நபரைக் கைது செய்ய நடவடிக்கை
தனியார் பயணிகள் பேருந்தில் இருந்து அரச வங்கியின் பிரதான கிளையின் உதவி மேலாளரின் பொருட்களைதை திருடி அவரது ஏ.டி.எம் வங்கி அட்டையிலிருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை மோசடியாக எடுத்த நபரைக் கைது செய்ய கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உதவி வங்கி மேலாளர் கிரிபத்கொட பொலிஸில் செய்த புகாரைத் தொடர்ந்து, அந்த நபரைக் கைது செய்வதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையிலிருந்து வங்கிக் கணக்கு அறிக்கையைப் பெற மஹர நீதவான் நீதிமன்றத்திலிருந்து உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இந்த உதவி வங்கி மேலாளர், மஹர எக்சத் மாவத்தை பேருந்து நிறுத்தத்திலிருந்து கடவத்தை – புறக்கோட்டை தனியார் பயணிகள் பேருந்தில் 138 ஆம் இலக்கத்தில் வேலைக்குச் செல்வதற்காக ஏறியுள்ளார். பேருந்து தலுகம பெட்ரோல் பங்கைக் கடந்தபோது, அவரது சூட்கேஸ் காணாமல் போனதைக் கண்டுபிடித்துள்ளார்.
சூட்கேஸை எடுத்துச் சென்ற நபர் கிரிபத்கொடையில்உள்ள திலகவர்தன நிறுவனம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
வங்கி அட்டையைத் தவிர, சூட்கேஸில் இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய் ரொக்கப்பணம் , சுமார் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கைப்பேசி, ஒரு தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் தொழில் புரியும் நிறுவனத்தின் ஒரு அடையாள அட்டை ஆகியவையும் இருந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக, கிரிபத்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.ஓ.பி. அபேரத்னவின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு புகார்கள் புலனாய்வுப் பிரிவின் துணை பொலிஸ் பரசோதகர் திலகசிறி ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு நடவடிக்கைப் பிரிவின் காவல் துறையினர் ரத்நாயக்க (90071), குலசிங்க (10789) மற்றும் அலுத்கே (100478) ஆகியோர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்தனர்.
(எம் .டி .எம்
ஹனபி)