அனுராதபுரத்தில் ஆறு கோவிட்-19 நோயாளிகள்; ஒருவர் மரணம்
கடந்த மே மாதத்தில் அனுராதபுரத்தில் ஆறு கொவிட் – 19 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தேஜன சோமதிலக (04) தேரிவித்தார்.
நோயாளிகள் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
அனுராதபுரம் சாலியவத்த பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரல் மாதம் கொவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)