உள்நாடு

மீன் வியாபாரியை படுகாயப்படுத்திய ஆறு இளைஞர்கள் கைது

மாகொல – வடக்கு பகுதியில் மீன் வியாபாரி ஒருவரைஃ ஓர் ஓட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகாயப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்கள் நேற்று (02) இரவு சப்புகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அறுவரில் இருவர் 5 கிராமும் 520 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நான்கு மன்னா கத்திகள் மற்றும் ஒரு பொம்மை பிளாஸ்டிக் கைத்துப்பாக்கியின் ஒரு பகுதியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தாக்குதல்தாரிகள் கொண்டு வந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 43 வயது ஊழியர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 31 ஆம் திகதி மதியம், பழைய மோட்டார் சைக்கிளிலும் முச்சக்கர வண்டியிலும், மீன் சந்தைக்கு வந்து தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு குழுக்களும் மாகொல மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாவர்

சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சஜித் மனோகர ரூபசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அஷான் கமகே, பொலிஸ் சார்ஜன்ட்கள் அபேரத்ன (19334), பெரேரா (32560), திலகரத்ன (36589), புஷ்பகுமார (55713), பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஜெயசிங்க (103658), பிரசன்ன (71772), உடுகொட (26487) மற்றும் சங்கல்ப (101260) ஆகியோர், வழக்கு நடவடிக்கைப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் சமிந்த (478) ஆகியோரால் மஹர நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

(எம். டி. எம். ஹனபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *