உள்நாடு

பிரதேச சபை உறுப்பினராக மல்வானை ஹபீல் ஹஸன் சத்தியப் பிரமாணம்

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மல்வானை நகர வட்டார பிரிவின் வரலாற்றில் முதற் தடவையாக அரசாங்க கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹபீல் ஹஸன் நேற்று (2) காலை வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அருன கருணாதிலக முன்னிலையில் தெல்கொடையில் அமைந்துள்ள பிரதேச சபை பிரதான காரியாலயத்தில் பிரதேச சபை உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பியகம பிரதான அமைப்பாளரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, பியகம பிரதேச சபையின் புதிய தலைவர் சட்டத்தரனி லால் குமாரபேலி,உப தலைவர் சுகத் திஸாநாயக்க உட்பட பல முக்கியஸ்தர்களும் படங்களில் காணப்படுகின்றனர்.

(எம். டி .எம். ஹனபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *