உள்நாடு

100 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பதித்த கதிரை நாகதீப புராண விகாரைக்கு அன்பளிப்பு

சுமார் 100 கோடி ரூபா பெறுமதியா ன 1 இலட்சம் இரத்தின கற்கள் பதி க்கப்பட்ட கதிரை ஒன்றை நாகதீப விகாரைக்கு அன்பளிப்புச் செய்யப் படவுள்ளது. இதனை இரத்தினபுரி பகுதி இரத்தினக்கல் வர்த்தகர்களைக் கொண்ட மினிதய பதனம எனும் அமைப்பு அன்பளிப்பு செய்கிறது.

இதனை நாக தீபத்துக்கு எடுத்துச் செல்லும் பணி இன்று (3) இரத்தினபுரி மணிக்கூட்டு கோபுரத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன்.இந்த மாணிக்ககல் கதிரை நாளை (4) களனி மற்றும் தம்புள்ள ரஜமகா விகாரைகளில் மக்களின் பூஜைக்காக வைக்கப்பட்டு நாளை (5) ருவன்வெலி மகாசாயவிலும் 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாக தீப விகாரையிலும் வைக்கப்பட்டு 7 ஆம் திகதி கடல் மார்க்கமாக நாக தீப புராண விகாரைக்கு எடுத்துச் செல் லப்பட்டு அங்கு இந்த மாணிக்கக் கல் கதிரையை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இடம் பெறும் என இவ்வமைப்பின் ஏற்பாட்டு குழுவினர் நேற்று
தெரிவித்தனர்.

(ஏ.ஏ.எம். பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *