பியகம பிரதேச சபைத் தலைவராக லால் குமாரபேலி பதவிப் பிரமாணம்
பியகம பிரதேச சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் லால் குமாரபேலி நேற்று (02) காலை 11.29 மணிக்கு சுப நேரத்தில்
பதவிப் பிரமாணம் செய்து கொண்டு தெல்கொட நகரில் உள்ள பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய தலைவரான வழக்கறிஞர் லால் குமாரபேலி, ஒரு ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை ஆரம்பித்ததை படத்தில் காணலாம்.
பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுகத் திசாநாயக்க, பிரதேச சபை உறுப்பினர் பிரியந்த குமார ரணசிங்க, பியகம பிரதேச சபையின் செயலாளர் உபுலி மத்துமகே மற்றும் சபையின் ஏனைய உறுப்பினர்களும் இத்தருணத்தில் கலந்து கொண்டனர்.
(எம் .டி .எம். ஹனபி)