உள்நாடு

இலங்கை ஹாஜிகளுக்கு அறபாவில் வழங்கப்படவுள்ளன சேவைகள் குறித்த கண்காணிப்பு விஜயம்..!

2025 ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் கடமைக்காக மக்கா வந்துள்ள இலங்கை ஹாஜிகளுக்கு அல் பைத் அமைப்பினால் அறபா மைதானத்தில் வழங்கப்படவுள்ள சேவைகளை கண்டறியும் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இலங்கை ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டிருந்தனர்
இன்று இலங்கை ஹஜ் குழு தலைவர் றியாஸ் மிஹ்லார் , தலைமையிலான குழுவில் ஹஜ் குழு உறுப்பினர்களான வை.எல்.எம்.நவவி, பேராசிரியர் அஸ்லம், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமட், கணக்காளர் நிப்றாஸ், வக்பு பிரிவு பிரதம எழுதுனர் ஏ.எஸ்.எம்.ஜாவித், திணைக்களத்தின் காத்தான்குடி இணை அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சியாட் மற்றும் மக்காவில் இலங்கை ஹாஜிகளுக்கு திணைக்களத்துடன் இணைந்து உதவி வரும் ஸாதிக் ஹாஜியார் உள்ளிட்ட குழுவினர் அறபா மைதானத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
ஹாஜிகளுக்கான கூடாரங்கள், இருப்பிட வசதிகள் , கழிவறை வசதிகள் மற்றும் உணவு வசதிகளுக்கான ஏற்பாடுகள் கடந்த வருடங்களைவிட சிறப்பாக செய்யப்பட்டிருப்பதை குழுவினரால் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதே வேளை மினாவிலும் ஹாஜிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மினா கூடாரத்தில் ஒவ்வொரு ஹாஜிகளுக்கும் படுக்கைக்கான குஸன் மெத்தையில் ஒரு தலையணை, ஒரு இலவச பொதியில் தொழுகை விரிப்பு, குடை, தண்ணீர் பேத்தல், பல் துலக்கும் பிறஸ், பற்பசை, சிறிய பையில் செய்த்தானுக்கு எறியும் சிறிய கற்கள்,தஸ்பீஹ் மணி, கைவிசிறி, என்பனவும் வைக்கப்பட்டுள்ளன, இதபோல் அறபா கூடாரத்திலும் ஒரு பெட்சீட் மற்றும் தலையணை உறை என்பனவும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.


(மக்காவில் இருந்து ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *