இலங்கை ஊடகவியலாளர்களுக்கு துருக்கி நாட்டின் காலை உணவு
இலங்கையில் உள்ள துருக்கி நாட்டின் தூதுவர் செமிஹ் லுட்டு ருஹட் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கொழும்பு 8 ல் உள்ள தனது அலுவலக பங்களாவுக்கு அழைத்து துருக்கி நாட்டின் காலை உணவினை அவருடன் உண்பதற்காக அழைப்பு விடுத்திருந்தார்
அத்துடன் தனது நாட்டின் உணவு முறைகள் அந் நாட்டில் உற்பத்தியாகும் பழவகைகள் உணவுத் தானியங்கள் பற்றி ஊடகவியலாளருக்கு விரிவாக விளக்கமளித்தார் அங்கு சீஸ், கோதுமை தின்பண்டங்கள், தேன், ஜேம், மரக்கறி பழ வகைகள், சொசேசஸ், பட்டர் துருக்கியில் அருந்தும் கோப்பி, தேயிலை, ஒலிவ் காய்கள் போன்ற உணவுப் பண்டங்களை. உண்டு உணவுகளையும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மகளுடன் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள துருக்கி நாட்டின் தூதுவர் செமிஹ் லுட்டு ருஹட் கொழும்பு 8 ல் உள்ள தனது அலுவலக பங்களாவுக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களை அழைத்து துருக்கி நாட்டின் உற்பத்தி உணவுபண்டங்களை காலை உணவினை பகிர்ந்தளித்தார்.
துருக்கி நாட்டிலிருந்து உற்பத்தியாகும் பழ வகைகள், தாணியங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தினார். அத்துடன் துருக்கி நாட்டில் இருந்து சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கை வந்தடைகின்றனர் அத்துடன் இலங்கையின் தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் துருக்கியும் உள்ளது.
எதிர்வரும் மாத்தில் இலங்கையுடனான பொருளாதார வர்த்தக சம்பந்தமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் அத்துடன் இலங்கையர் சுற்றுலா பிரயாணிகளாக துருக்கி செல்கின்றனர் எனவும் துாதுவர் செமிஹ் லுட்டு ருஹ்ட் தெரிவித்தார் .









(அஷ்ரப் ஏ சமத்)