சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி தினம் ஓட்டமாவடியில் ஆரம்பம்
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி தின ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலக பழைய கட்டிட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி வலய முகாமையாளர் என்.விஜிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.மதியழகன், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பிரதம வளவாளராக மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அறபிக்கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்செய்க் ஏ.ஜி.சாதிகீன் மதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.





(எஸ்.எம்.எம்.முர்ஷித்)