பேருவளை முஹம்மத் அப்தால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பதவியேற்பு
முஹம்மது அப்தால் அஹ்சான் மரிக்கார் (லண்டன் எல்.எல்.பி பல்கலைக்கழகம்) உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக கௌரவ நீதிபதிகள் யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் 15.05.2025 அன்று பதவியேற்றார்.
இவர் மேன்முறையீட்டு நீதிமன்ற கௌரவ நீதியரசர் அஹ்சான் மரிக்கரின் மகனும், பேருவளையைச் சேர்ந்த முன்னாள் பேருவளை நகர பிதா மர்ஹும் வழக்கறிஞர் ஏ.டபிள்யூ.எம். ராசிக் மரிக்கரின் பேரனும், மர்ஹும் சட்டத்தரணி அதா தாசிம் மற்றும் வழக்கறிஞர் ஏ.எல்.எம்.எம். சஹீத் ஆகியோரின் கொள்ளுப் பேரனும் ஆவார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)