தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா..!
இரண்டு கோடி பத்து இலட்சம் ரூபா செலவில் அக்குறணை தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா
மர்ஹூம் எ. எஸ். எம். ரம்ஸீன், எ. எஸ். எம். இலியாஸ் எ. எஸ். யாஸ் முஹமட் ஆகிய மூன்று சகோதரர்களின் நன்கொடை நிதி உதவியுடன் இரண்டு கோடி பத்து இலட்சம் ரூபா செலவில் அக்குறணை தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் ஆர். எப். ரியாஸா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டுகஸ்தோட்டை கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி சுஜீவ வீரசுந்தர கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் போது நன்கொடையாளர்களான எ. எஸ். எம். இல்லியாஸ் , எ. எஸ். ர்pயாஸ் முஹமட் முன்னாள் ஒய்வு நிலை அதிபர் எஸ். எச். எம். ரியாழ்தீன் ,ஸம் ஸம் அறக்கட்ளையின் இயக்குனர் அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா ஆகிய முக்கிய பிரமுர்களுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
(இக்பால் அலி – மாவத்தகம தினகரன் நிருபர்)



