உள்நாடு

சீரற்ற வானிலை; இழப்பீட்டுக்கு 1000 மில்லியன் ஒதுக்கீடு

சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரிடர் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு 2.5 மில்லியன் ரூபாவும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்தின் அளவிற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக தெரிவித்தார்.

பேரிடர் காரணமாக உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பேரிடரால் ஊனமுற்ற ஒருவருக்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *