மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள்
பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் தமிழ் மொழிப் பாடசாலைகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடந்தையும் , அனைத்து மொழி பாடசாலைகளுக்கிடையில் நான்காம் இடத்தினையும் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த M.F.F நிஹ்லா உட்பட மருத்துவ மற்றும் வர்த்தக பீடங்களுக்குத் தெரிவாகி சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த ஏனைய அனைத்து சாதனை மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும், நூற்றாண்டை எட்டிப் பிடித்திருக்கும் பாடசாலையின் விஷேட சின்னம் வெளியீட்டு விழாவும் இன்று 2025 .05. 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு S.R குமார் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ZAM GEMS முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் அஹ்ஸன் ரிபாய், கௌரவ அதிதிகளாக அல்ஹாஜ் A.G.A பாரி, ZAM GEMS பணிப்பாளர் அல்ஹாஜ் ரீதா ரிபாய் ,
சிறப்பு அதிதிகளாக களுத்துறை மாவட்ட கல்விப் பணிப்பாளர் A.U விக்ரமரச்சி , வலயக் கல்விப் பணிப்பாளர் M.R.B லியனகே மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளரும் பேராசிரியருமான ரங்கிக ஹல்வதுர கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
(பேருவலை பீ.ம்.முக்தார்)