சடலத்துடன் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் தீவிர விசாரணை
இறக்குவானை எந்தானைப் பொலீஸ் பிரிவில் கிரிநொதாகம கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மயான பூமியில் இனம் தெரியாத ஒரு நபரோடு எரிந்த நிலையில் காணப்பட்ட ஒரு முச்சக்கர வண்டி நேற்று முன்தினம் பொலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எரிந்து வறண்ட நிலையில் காணப்படும் இந்த சடலம் தொடர்பாகவும் இரும்பு மட்டுமே எஞ்சியுள்ள முச்சக்கர வண்டி தொடர்பாகவும் பொலீசார் பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)