உள்நாடு

கொழும்பு நகரில் அதிகாலை பலத்த காற்று; மரங்கள் வீழ்ந்ததால் வீடுகள் சேதம்

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி பிரதான வீதியிலும், கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் மரங்கள் விழுந்து சேதமடைந்தன.

கிராண்ட்பாஸில் உள்ள செயிண்ட் ஜோசப் வீதியில் பெரிய மரம் ஒன்று விழுந்ததில், அருகிலுள்ள ஆறு வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த விபத்தில் குடியிருப்பாளர்கள் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *